புனித குர்ஆன் அல்லாஹ்வால் மனித சமுதாயத்திற்கு அருளப்பட்ட மிகப் பெரும் பரிசாகும். எல்லா ஞானங்களும் யாரிடம் தோன்றி யாரிடம் முடிவு அடைகின்றதோ அந்த அருளாளன் இடமிருந்து வந்ததால் அலர்குர்ஆன் ஞானம் நிரம்பியுள்ளதாக இருக்கிறது. மனிதனுடைய பிரச்சனைகள் வாழ்க்கையின் எத்தகைய நிலையில் ஏற்படுவதாக இருந்தாலும் சரி, அந்த பிரச்சனைகளுக்கு அழகிய தீர்வுகளை குர்ஆன் அளிக்கிறது. மேலும் வாழ்வியல் சிக்கல்களை எதார்த்தமாக அணுகுவதோடு தலை சிறந்த தீர்வுகளை சத்திய கண்ணோட்டத்துடன் அணுகி அது குறைகளை தீர்க்கிறது.
நபி(ஸல்) அவர்கள் தனக்கு அருளப்பட்ட குர்ஆனை முழுமையாக மனதில் சுமந்தவர்களாக இருந்தார்கள்.
...ரமலான் மாதத்தின் ஒவ்வொரு இரவிலும் ஜிப்ரீல்(அலை) நபியவர்களை சந்திப்பார்கள். அவரிடம் நபி(ஸல்) அவர்கள் குர்ஆனை எடுத்தோதிக் காட்டுவார்கள். (புகாரி 4997)
சஹாபாக்களில் பலரும் குர்ஆனை முழுமையாக மனனம் செய்திருந்தார்கள்.
0 Comments